வியாழன், 19 நவம்பர், 2015

வருக! கவியரசர் புகழ்பருக !

வருக! கவியரசர் புகழ்பருக  !

அள்ளஅள்ளக் குறையாத
   அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
   திறம்படைத்த தேவனவன்!

செங்கரும்புச் சாறெடுத்துச்                  
  சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
  தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
Related Posts Plugin for WordPress, Blogger...