புதன், 17 டிசம்பர், 2014

பாரதி வாழ்க!

அறுசீர் விருத்தம் ( என்னுள் கவியார்வத்தைத் தூண்டிய 'ஊமைக்கனவுகள்'..ஜோசப் விஜூ அய்யாவிற்கு நன்றி..!)

          பாரதி வாழ்க! வாழ்க!

            
அடங்கிடாக் காளை யென்றே

             ஆர்ப்பரித் தெழுந்து சீறி 

         முடங்கியே கிடந்தி ருந்த 

             மொழியினைச் சிகரம் ஏற்றிச் 

         சடங்கினை முட்ட றுத்துச்

             சமமென வாழ்ந்து காட்டித் 

         தடம்தனைப் பதித்துச் சென்ற 

             தமிழ்க்கவி வாழ்க! வாழ்க!

            தமிழே போற்றி!! 

         அன்னையே தமிழே உன்னை 

             அகமெலாம் கொண்டி ருப்பேன்!

         தன்னையே தந்தேன் நானும் 

             தரணியில் காப்பாய் தாயே!

         விண்ணையே முட்டு கின்ற 

             விதந்தனில் வீரம் தந்து 

         கண்ணையே இமைபோல் காக்கும் 

             கருணையே கனிவே போற்றி!.

        சிகரமே வென்று காட்டு! 

         சீர்மிகு தமிழை என்றும் 

              சிந்தையில் ஏற்றிப் போற்று!

         பார்மிசை எங்கும் சென்று 

               பைந்தமிழ் உணர்வை ஊட்டு!

         வேரெது நம்வாழ் வுக்கு?

               விழுதெனத் தமிழைத் தாங்கு!

         போரென உழன்று நிற்கும் 

               புவிக்குநீ அமைதி நாட்டு!

         காரெனக் கடமை யாற்றிக் 

               கயமையைத் தூர ஒட்டு!

         மார்பினைப் பிளந்த போதும் 

               மறத்தினை உயிர்போல் போற்று!

         தேரென நிமிர்ந்து ஓடி 

               தீமையைத் தீயில் வாட்டு!

        சேரிடம் அறிந்து நீயும் 

               சிகரமே வென்று காட்டு!

 

            

15 கருத்துகள்:

  1. அருமை சார்..பாரதிக்கு ஒரு பாரதியின் பா...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா வீரமிகுந்த வரிகள் படிக்கும்போதே உணர்வுகள் புடைக்கிறதே...

    நண்பரே எனக்கு தெரிந்த அளவு வலைச்சரத்தை தொடுத்துக்கொண்டு இருக்கிறேன் வருகை தந்து பூவும் நாறும் சரியாக சேருகிறதா என காண அழைக்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    வெண்பாவில் ஊறிய எண்ணக்கவி கண்டு
    துள்ளிஎழுந்தது எண்னுள்ளம்
    அள்ளி அணைத்து பாடினேன்.
    அன்பில் மலர்ந்தது அகம்...

    நன்றாக உள்ளது ஐயா. தொடருங்கள் ...
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. பாரதிக்கு பிடித்த மாதிரியே ஒரு கவிதை அருமை.
    பாரதியின் கூற்றைப் பின்பற்றி அனைவரும் ஏமாற்றாமலும், ஏமாறாமலும் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா
    தங்களுக்குப் பாரதியார் ஒப்பனை
    வெகு பொருத்தம்

    கவியும் அருமை
    பாரதி உருவும் அருமை

    பதிலளிநீக்கு
  6. மிரட்டலான புகைப்படம் ... அருமை.
    விருத்தத்தையும் படித்தேன் நன்றாக இருக்கிறது.
    பிரார்த்தனை குறித்து பாரதி சொன்ன உண்மையான வார்த்தைகள்..
    அருமை அண்ணாத்தே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அன்பின் அய்யா,
    அங்கே பார்த்தீர்களா பாரதியே முறைத்துப்பார்க்கும் மேலுள்ள அந்த இரண்டு வரிகளை எடுத்துவிட்டால் பதிவு மிக மிக அருமையாக இருக்கும்.
    ஓஹோ, அது திருஷ்டிப் பொட்டோ?
    யாப்பின் ராஜபாட்டையில் உங்கள் ரத கஜ துரக பதாதிகள் அணி வகுக்கட்டும்.
    நானோ,

    என் “ஐ“ முன் நில்லன்மின் தெவ்வீர் பலர்என்“ஐ“
    முன்னின்று கன்னின்ற வர் “
    என்று இப்போதே கட்டியம் கூறிவிடுகிறேன்.
    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா!
    உங்களின் முயற்சியை வாழ்த்த முத்துநிலவன் அய்யா அருகில் இல்லாததுதான் குறை!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. விருத்தத்திற்கு பொருத்தமாய்
    முண்டாசு பாரதியாய்!!!
    கலக்குங்க:)

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான சொல்லாடலைக் கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஐயா
    பாரதியின் ஒப்பனையும் பாரதிக்கான வரிகளும் கண் கவர்கிறது. பாரதியைப் பாட ஆரம்பித்தாலே வீரமான வரிகள் வந்து அமர்வது இயல்போ? உண்மையில் அப்படியொரு மகிழ்ச்சி தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அருமை அருமை அய்யா
    அறுசீர் எண்சீரின் அழகுசிந்தும் பாக்கள் அய்யா...
    அந்த இரண்டு வரிகள் இருக்கட்டும்.
    நன்றிக்கான நாகரிகம் நம்மோடு தொடரட்டும்
    காளை என்பதை (படத்திற்கேற்ப) சிறுத்தையென்று மாற்றினாலும் கவிதை அர்த்தமோ இலக்கணப் பொருத்தமோ மாறாது! அழகும் கூடும். இனி இவ்வழியும் யோசிக்க வேண்டுகிறேன். நன்றி த.ம.வாக்குப்பட்டை எங்கே?

    பதிலளிநீக்கு
  12. மிகவும் மகிழ்வாயிருக்கிறது. மரபின் வழியான தங்களின் பயணம் தொடர வாழ்த்துகள். வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ஐயா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...