வெள்ளி, 28 நவம்பர், 2014

GOOGLE என்னும் மாய உலகம்

        மாயப் படங்கள்

வலையுலக நண்பர்களே..வணக்கமுங்க..!.ஜாலியா ஒரு பதிவு.!.

google..என்கிற மாய உலகத்தில் நம்மை மிரளவைக்க,நம் புருவங்களை உயரவைக்க,எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன..!.

நான் ரசித்த சில படங்கள்..இதோ..

பார்த்துவிட்டு கமெண்ட் அடிங்கோ..! அது கவிதையாகவோ,நச்சுனு காமெண்டாகவோ இருக்கட்டும்..!.

உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுங்க..!

செவ்வாய், 18 நவம்பர், 2014




கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் 'கம்பன் தமிழும் கணினித்தமிழும்'

ஒரு வாசகனின் பார்வையில்..

   "கிளிக்குப் பச்சைவண்ணம் தீட்டவேண்டுமா?"எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை'தேவையா? அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

செவ்வாய், 4 நவம்பர், 2014

இலக்கியப் புதிர்...

காதலுகாக மதம் மாறிய கவிஞன்.....!!!

"காதலுக்கு மதமுமில்லை;ஜாதியில்லையே
  கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே "என்ற கவியரசரின் பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலுக்காக மதம் மாறுவது என்பது இன்றைக்குப் பெரிய விடயமல்ல. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பதும் பெரிய செய்தியல்ல.கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர், சைவத்திலிருந்து சமணத்திற்கும் பின் சைவத்திற்கும் மாறியது அனைவர்க்கும் தெரிந்ததே..!
ஆனால்,காதலுக்காக ஒரு கவிஞர் மதம் மாறினார் என்பதுதான் அதிசயம்.!
Related Posts Plugin for WordPress, Blogger...